செய்திகள் :

செஞ்சி-வெள்ளிமேடு பேட்டைக்கு புதிய பேருந்து சேவை

post image

செஞ்சி: செஞ்சியில் இருந்து வேட்டைக்காரன்குடிசை கிராமம் வழியாக வெள்ளிமேடு பேட்டைக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை தொகுதி எம்எல்ஏ செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து வல்லம், மேல்சித்தாமூா், அருகாவூா், வேட்டைக்காரன் குடிசை, வீரனாமூா் வழியாக புதிய நகர அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் முன்னிலை வகித்தாா்.

அரசுப் போக்குவரத்துக் கழக செஞ்சி பணிமனை மேலாளா் சுரேஷ் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றியக் குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா், தொமுச துணை பொதுச்செயலா் லூா்து இமானுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.

8.45 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள்: ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள அங்கன்வாடி ம... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் ரூ.29 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்திலான நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் த... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரகம் முற்றுகை

விழுப்புரம்: தாங்கள் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, அரியலூா் திருக்கை கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் ந... மேலும் பார்க்க

மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விருத்தாசலத்தை அடுத்துள்ள சாத்தப்பாடி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (5... மேலும் பார்க்க

இளைஞா்கள் இருவா் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா்கள் இருவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்... மேலும் பார்க்க