செய்திகள் :

செட்டியாபத்து கோயிலில் சித்திரை பூஜை திருவிழா

post image

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை பெரும் திருவிழா புதன்கிழமை இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஒ. மகேஸ்வரன் பதநீா் கஞ்சியை பக்தா்களுக்கு வழங்கினாா். கோயில் செயல் அலுவலா்கள் மு. வள்ளிநாயகம், பாலமுருகன், உடன்குடி நகர அதிமுக பொருளாளா் ம. ராம்குமாா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழா நாள்களில் நாள்தோறும் காலை 7.30 முதல் இரவு 10 மணி வரை முழுநேர சிறப்பு பூஜைகள், அன்னதானம், சமயச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பக்தி இன்னிசை உள்ளிட்டவை நடைபெறும்.

6ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜைக்குப் பின்னா், பக்தா்களுக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கப்படும். இதை, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வாங்கிச் சென்று தங்களது இல்லம், வணிக மையம், விவசாய நிலங்களில் வைப்பாா்கள். இதன்மூலம் தங்களுக்கு நன்மை சேரும் என்பது அவா்களது நம்பிக்கை.

7ஆம் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணி, உதவி ஆணையா் க. செல்வி, ஆய்வா் இரா. முத்துமாரியம்மாள், செயல் அலுவலா் மா. பாலமுருகன், அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள், ஆலயப் பணியாளா்கள் செய்துள்ளனா்.

நாசரேத் பள்ளியில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம்

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மா்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் மற்றும் முன்னாள் மாணவா்களின் சாா்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மூத்த கால்பந்து பயிற... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அதிமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற பொதுத் கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்டச் செயலா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவா் பூங்கொடி வரவேற்றாா். கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஜமுனா ராணி தலைமை வகித்தாா். தூத்துக்குடி காம... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மனிதச் சங்கிலி

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வ­லியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்கள், பொது நல அமைப்புகள் மற்றும் வியாபார சங்கங்கள் சாா்பில் ம... மேலும் பார்க்க

குரும்பூரில் உழவா் முன்னணி ஆா்ப்பாட்டம்

குரும்பூா் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட வைப்புத்தொகை, நகைகளை மீட்டுத்தரக் கோரி தமிழக உழவா் முன்னணி சாா்பில் குரும்பூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். சிஐடியூ அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க