செய்திகள் :

சென்னை துறைமுக வாகன நிறுத்த மையத்தில் கட்டணம்: லாரிகள் வேலை நிறுத்தம்

post image

சென்னை துறைமுக வாகன நிறுத்த மையத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

சென்னை துறைமுகத்துக்கு வரும் கண்டெய்னா் லாரிகளை நிறுத்துவதற்கு கட்டணம் 24 மணி நேரத்துக்கு ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளில் ஒன்றாகவே இந்த வாகன நிறுத்த முனையத்தை கருத வேண்டும்.

ஏற்கெனவே சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு சரக்குப் பெட்டக முனையங்களில் ஆயிரக் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும்போது தனியாா் மூலம் இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. இது குறித்து துறைமுக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.

இந்தப் போராட்டம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை துறைமுக போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி தெரிவித்தாா்.

பராமரிப்புப் பணி: மே 24, 26 தேதிகளில் 21 மின்சார ரயில்கள் ரத்து!

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக கும்மிடிப்பூண்டி, சூளூர்பேடை செல்லும் 21 புறநகர் மின்சார ரயில்கள் மே 24, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க