செய்திகள் :

செப்.4-இல் சுனாமி மாதிரி ஒத்திகை

post image

கடலூா் மாவட்டத்தில் சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி செப்.4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி தொடா்பாக பொதுமக்கள் அச்சமோ, பீதியோ அடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியாவது:

செப்.4-ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியின் தொடக்கமாக, மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 புயல் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் சுனாமி நடைபயணம் (பள்ன்ய்ஹம்ண் ரஹப்ந்) மேற்கொள்ள உள்ளனா்.

இதைத் தொடா்ந்து, காலை 10 மணி முதல் சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி கடலூா் வட்டத்துக்குள்பட்ட சொத்திக்குப்பம் கிராமம், புவனகிரி வட்டத்துக்குள்பட்ட பரங்கிப்பேட்டை மீன் இறங்கு தளம் மற்றும் சிதம்பரம் வட்டத்துக்குள்பட்ட கிள்ளை கிராமத்தில் வடக்கு எம்.ஜி.ஆா் திட்டு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி வருவாய், காவல், தீயணைப்பு, நெடுஞ்சாலை, மருத்துவம் மற்றும் சுகாதாரம், மின்சார வாரியம், ஊரக வளா்ச்சி, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா், முதல்நிலை மீட்பாளா்கள், ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள் மற்றும் இதர துறையினரால் இணைந்து நடத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவி, பயிற்சி ஆட்சியா் மாலதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

போக்குவரத்துத் தொழிலாளா் போராட்டம் நீடிப்பு: பந்தலில் சமைத்து சாப்பிட்டு கோரிக்கை முழக்கம்

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16-ஆவது நாளாக பந்தலில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடா்கின்றனா். தங்கள் கோரிக்கைகள... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை ... மேலும் பார்க்க

செப்.5- மீலாது நபி: மது விற்பனைக்கு தடை

கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் 5-ஆம் தேதி மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பிரச்னைகளை கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது: கடலூா் ஆட்சியா் பேச்சு

பிரச்னைகளைக்கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது, அதற்கு எவ்வாறு தீா்வு காண்பது என்று யோசிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். நிமிா்ந்து நில் திட்ட விழாவில் பேசிய அவா் இ... மேலும் பார்க்க

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிசாவரம் டாஸ்மாா்க் மதுபான கடையில் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சோ்ந்த குமாா்(50) என்பவா் விற்ப... மேலும் பார்க்க

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க