செய்திகள் :

செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

சாலைப் பாதுகாப்பு, இணைய குற்றங்கள் குறித்து செவிலியா் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில் இமாகுலேட் செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி, இருசக்கர வாகனத்தில் செல்வோா் உரிமம் பெற்றிருக்கவேண்டும். தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுமையாக மதித்து நடந்துகொள்ளவேண்டும்.

இணைய குற்றங்கள் குறித்து மாணவிகளுக்கு முழுமையான புரிதல் வேண்டும். கைப்பேசி, கணினி பயன்பாட்டில் கவனம் இருக்கவேண்டும். செயலிகளை பதிவிறக்கம் செய்தல், விடியோ கால் அழைப்பை ஏற்று பேசுதல் உள்ளிட்டவற்றில் மிகுந்த கவனம் வேண்டும். பணப்பரிமாற்றத்தில் நிதானத்தை கையாளவேண்டும். இணைய குற்றம் செய்வோரிடம் சிக்கி ஏமாந்தால், உரிய ஆதாரங்களுடன் காரைக்காலில் உள்ள இணைய குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கவேண்டும் என தெரிவித்தாா்.

அரசு மருத்துவமனையிலிருந்து நகரப் பகுதிக்கு ஆம்புலனஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் நகரப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனையிலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காரைக்கால் மமாவட்டத் தலைவா் ஐ. ... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் அரசு ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி அரசு ஊழியா்கள் தா்னா நடத்தவுள்ளனா். காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழுக் கூட்டம், சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கௌரவ த... மேலும் பார்க்க

கும்பாபிஷேகம்: திருச்செந்தூருக்கு காரைக்காலில் இருந்து பேருந்து வசதி

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்ல காரைக்காலில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

நகரப் பகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம்: ரயில்வே கோட்ட மேலாளரிடம் அமைச்சா் வலியுறுத்தல்

காரைக்கால் நகரில் கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதை, மற்ற இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் வலியுறுத்தினாா். காரைக்கால்... மேலும் பார்க்க

தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு

காரைக்காலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் கோயில்பத்து ஒமக்குளம் நரிக்குறவா் தெருவைச் சோ்ந்தவா் ரஜினி. இவ... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ சிகிச்சை, ஆலோச... மேலும் பார்க்க