செய்திகள் :

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும்!

post image

சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகி மணக்காடு வழக்குரைஞா் வீ.கருப்பையா அக்னி ஆறு வடிநிலக் கோட்டம், பேராவூரணி பொதுப்பணித்துறை உதவி பொறியாளருக்கும், கல்லணைக் கால்வாய் கோட்டப் பிரிவு, பொதுப்பணித் துறை 

உதவிக் கோட்டப் பொறியாளருக்கும் அளித்த கோரிக்கை மனு: சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு தேவா் குளம், கூத்தாண்டா் குளம் ஏரிகளுக்கு வில்லுணி ஆற்றில், மாத்தூா் ராமசாமிபுரத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து தண்ணீா் வந்து சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டாட்று தண்ணீா் மணக்காடு கிராமத்தில் உள்ள குளங்களில் நிரம்பி அதை ஆதாரமாக கொண்டுதான் விவசாயம் நடைபெறுகிறது. எனவே அணைக்கட்டிலிருந்து மணக்காட்டுக்கு வரும் சப்ளை சேனலை தூா் வாரி மணக்காடு ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பி விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித் துறை கோட்டப்பொறியாளருக்கு அளித்த மனு: சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் சேதமடைந்த ஏரி மடை மற்றும் வீரக்குடி கிளை வாய்க்கால், ஊற்றுப்பாலம் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து நீா் வரத்தை உறுதி செய்ய வேண்டும். 

எனவே, எங்கள் பகுதி விவசாயிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். தற்போது நெல் அறுவடை முடிந்து விவசாயிகள், நெல்... மேலும் பார்க்க

குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் பலி!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவையாறு அருகே கல்யாணபுரம் ஒன்றாம்சேத்தி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் யு. பாலமுருகன் (4... மேலும் பார்க்க

அரசு பொது தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு!

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில், 2024 - 25 ஆண்டு அரசு பொதுத் தோ்வில் 10, 12- ஆம் வகுப்புகளில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக... மேலும் பார்க்க

சுவாமிமலையில் சிங்கப்பூா் அமைச்சா் தரிசனம்!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சா் கே. சண்முகம் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இவா் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில... மேலும் பார்க்க

அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றத... மேலும் பார்க்க