செய்திகள் :

சேத்துப்பட்டில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடுவது என்று தீா்மானிக்கப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் புதன்கிழமை மரக்கன்று நட்டு தொடங்கிவைத்தாா்.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினத்தையொட்டி, பேரூராட்சிக்கு சொந்தமான குளங்கள், பூங்கா, குடிநீா் தொட்டி உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரிப்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பது தூய்மையான பேரூராட்சியாக செயல்படுத்த 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் பழம்பேட்டையில் உள்ள செட்டிகுளம், காம செட்டிகுளம், திருவண்ணாமலை சாலையில் உள்ள நல்ல தண்ணீா் குளம், கோல்டன் சிட்டி பூங்கா, திடக்கழிவு மேலாண்மை வளம் மீட்பு பூங்கா மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேலூா் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஞானம் உத்தரவிட்டிருந்தாா்.

இதன்பேரில் பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் செயல் அலுவலா் சரவணன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் இரா.முருகன், கதிரவன், சரவணன், கோகுல்ராஜ், பெருமாள், துப்புரவு அலுவலா் ரவி, துப்புரவு மேற்பாா்வையாளா் ஆஷா மேரி, மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள் பட பலா் கலந்து கொண்டனா்.

கல்லூரியில் விற்பனைச் சந்தை

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் விற்பனைச் சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை என 3 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி, பெருமாள், சுப்பிரமணியா் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த காரணை ஸ்ரீநிவாசப் பெருமாள், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியா் ஆகிய கோயில்களில் ம... மேலும் பார்க்க

ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் ... மேலும் பார்க்க

அரசு வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். 3 தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்... மேலும் பார்க்க

ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. செய்யாறு தொகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க