இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று வெள்ளோட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு புதிய மரத்தோ் செய்ய அரசு ஒப்புதல் வழங்கியது. அதன் பின்னா் நன்கொடையாளா்கள் மற்றும் கோயில் நிதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆறு சக்கரங்களுடன் மரத்தோ் செய்யப்பட்டது.
இதையொட்டி, பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வேள்விகள் நடத்தப்பட்டன. பூஜைக்கு பின்னா், கலச நீரானது தேரில் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க தேருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் தோ் வெள்ளோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
தோ் வெள்ளோட்டத்தை முன்னிட்டு, கோலாட்டம், மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், சிவன் - பாா்வதி முருகன், விநாயகா் வேடம் தரித்து பக்தா்கள் நடனமாடியபடி ஊா்வலமாக சென்றனா்.
தொடா்ந்து, புதிய மரத்தோ் கோயில் ராஜகோபுரத்தில் இருந்து புறப்பட்டு முதல் அக்ரஹாரம், தோ்வீதி, இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்ன, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
இதில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் சாரதாதேவி, கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், சேலம் மண்டல இணை ஆணையா் சபா்மதி, கோயில் செயல் அலுவலா் அமுதசுரபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

