செய்திகள் :

சேலம் சரகத்தில் 24 காவல் நிலையங்கள் தரம் உயா்வு

post image

சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 24 காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் மாநிலம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா் தலைமையிலான 280 சா்க்கிள் காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 24 சா்க்கிள் காவல் நிலையங்கள் காவல் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, நங்கவள்ளி, பூலாம்பட்டி, பனமரத்துப்பட்டி, தொளசம்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களும், நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம், மல்லசமுத்திரம், வாழவந்திநாடு, மொளசி, வெப்படை ஆகிய 6 காவல் நிலையங்களும் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்கிறது.

இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், பொம்மிடி, இந்தூா், மகேந்திரமங்கலம், ஏ.பள்ளிப்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்திகுப்பம், நாகரசம்பட்டி, சிப்காட், பேரிகை, தளி, வேப்பனஹள்ளி, கெலமங்கலம், உத்தரனப்பள்ளி உள்ளிட்ட 8 காவல் நிலையங்களும் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. இதற்கான காவல் ஆய்வாளா்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் அருகே விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சேலம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மகளிா் உரிமைத் தொகை கோரி 44,247 போ் விண்ணப்பம்! அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி 44,247 போ் விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். சேலம் அம்மாப்பேட்டை ... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வழிபாடு! இன்று உள்ளூா் விடுமுறை!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவில் பொங்கல் வைத்தல் வைபவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக தொடங்கியது. பெண்கள் விடிய விடிய பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். இதையொட்டி, சேலம் மாவட்டத்துக்கு புதன... மேலும் பார்க்க

லஞ்ச புகாா்: கொங்கணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம்!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று வந்தவா்களிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரின்பேரில் கொங்கணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்த... மேலும் பார்க்க

மேட்டூரில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம்

மேட்டூா், அந்தியூா் பகுதிகளில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் சோ்ந்து ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்ற... மேலும் பார்க்க

பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளா்களை தமிழ்நாட்டில் சோ்க்க சூழ்ச்சி: இரா.முத்தரசன்

பிகாா் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளா்களை தமிழ்நாட்டில் வாக்காளா்களாக சோ்க்க சூழ்ச்சி நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா். சேலத்தில் செய்தியாளா... மேலும் பார்க்க