செய்திகள் :

சேலம் சிறுமி மாயமான வழக்கு; சிறுமியை குடும்பத்தினரே விற்றார்களா? போலீஸ் தீவிர விசாரணை

post image

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள புள்ளக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தறித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனர். மீனா கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மகன்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு ராஜா, மீனா ஆகியோர் வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுமி கவிஷாவை, ராஜாவின் தாய் சாந்தி அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

வழக்கமாக மாலையில் அங்கன்வாடியிலிருந்து சிறுமி கவிஷா தானாக வந்துவிடும் நிலையில், 30ம் தேதி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பாட்டி சாந்தி அங்கன்வாடி மையத்திற்குச் சென்று விசாரித்த போது காலையிலேயே சிறுமி வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கவிஷா
சிறுமி கவிஷா

இதைத்தொடர்ந்து தேவூர் போலீஸிடம் ராஜா புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அங்கன்வாடி மையத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில், ராஜாவின் வீடு மற்றும் அங்கன்வாடி மையம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாயமான சிறுமி கவிஷாவை குடும்பத்தினரை விற்பனை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

அது தொடர்பாக பாட்டி சாந்தி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்ய தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த மாணவன்; 3 பேர் கைது - என்ன நடந்தது?

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் ஹுலிகட்டி என்ற இடத்தில் இருக்கும் அரசு பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் சுலைமான் கோரிநாயக். இப்பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டிய... மேலும் பார்க்க

நாமக்கல்: கடன் தொல்லை - ராசிபுரத்தில் 3 பெண் குழந்தைகளை கொலை செய்து தந்தை விஷம் அருந்தி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35). இவரது மனைவி பாரதி(26). இந்த தம்பதியினர்களுக்கு 10 பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 4 குழந்தைகள் ... மேலும் பார்க்க

மதம் மாறி திருமணம் செய்ய மறுப்பு; வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை - ம.பி-யில் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலம், நவாரா என்ற இடத்தில் வசித்தவர் பாக்யஸ்ரீ(35). இவரிடம் அதே ஊரை சேர்ந்த ஷேக் ரியாஸ்(42) என்பவர் தன்னை திருமணம் செய்யும்படி நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்தார். அவரை அடிக்கடி பின் த... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: மாயமான மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு; இறுதிச் சடங்கில் போலீஸார் குவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் அப்புக்குட்டி என்கிற முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்படக்கூடிய `த... மேலும் பார்க்க

`குடிப்பழத்தால் என் மகன், நான் இறந்துவிட்டதாக கூறி சொத்தை விற்றுவிட்டான்' -90 வயது முதியவர் கண்ணீர்

பீகாரில் ஒருவர் தனது தந்தை உயிருடன் இருக்கும் போதே, அவர் இறந்து விட்டதாக கூறி குடும்ப சொத்தை மகன் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முஜாபர்பூர் அருகில் இ... மேலும் பார்க்க

அழுது வீடியோ வெளியிட்ட CRPF பெண் காவலர்; "தாமதமாக FIR போட்டதாகச் சொல்வது பொய்" - நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள பொன்னை நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரின் மகள் கலாவதி (வயது 32), ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் காவலராக தேசப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வர... மேலும் பார்க்க