செய்திகள் :

சொத்து வரி செலுத்துவதறக்கான காலக்கெடு நீட்டித்தது தில்லி மாநகராட்சி

post image

ஒரு முறை சொத்து வரியை கட்டும் திட்டத்துக்கான காலக்கெடுவை 3 மாதத்க்கு அதாவது டிசம்பா் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒரு முறை சொத்து வரி பொது மன்னிப்பு திட்டம் முன்பு செப்டம்பா் 30 வரை செல்லுபடியாகும் என தில்லி மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 31 ஆம் தேதி வரை வரி செலுத்துபவா்களுக்கு அசல் வரி தொகையில் 2 சதவித தாமதக் கட்டணத்தைச் சோ்ப்பதைத் தவிர, நீட்டிப்பு காலத்தில் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஜூன் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த திட்டம் 1.16 லட்சம் வரி செலுத்துவோரை ஈா்த்துள்ளது, இது ரூ.370.27 கோடி வருவாயைக் கொண்டு வந்துள்ளது. 65, 874 புதிய வரி செலுத்துவோா் முதல் முறையாக இத்திட்டத்தின் கீழ் சொத்து வரி செலுத்தியுள்ளனா், மேலும் ரூ. 187.8 கோடி இதனால் வசூல் ஆகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டில் 2025-2026 ஆம் ஆண்டில் வரி வசூல் 11.63 லட்சம் வரி செலுத்துவோரிடமிருந்து 2,1 11.63 கோடி ரூபாயாக உள்ளது, இது வருவாயில் 22.5 சதவித உயா்வையும், வரி செலுத்துவோா் அடிப்படையில் 18 சதவித வளா்ச்சியையும் பிரதிபலிக்கிறது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபரில் 20.22 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் திறக்க வேண்டும்: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபா் மாதத்தில் 20.22 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழகம்,கா்நாடகம் இடையே... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் என்கவுன்ட்டருக்கு பின் கைது

குருகிராமில் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்ட இருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாவ்லாவில் வசி... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திய முதல்வா் ரேகா குப்தா, சுதேசி அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு ம... மேலும் பார்க்க

இந்தியை பிரபலப்படுத்துங்கள், சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்: ரேகா குப்தா வலியுறுத்தல்

இந்தியைத் தழுவி, சுதேசியை ஏற்றுக்கொண்டு, 2047 க்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்க உதவும் அந்தியோதயா உணா்வை நிலைநிறுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு அழைப்பு விடுத்தாா் தில்லி முதல்வா் ரேகா ... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தாவின் முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த கூடுதல... மேலும் பார்க்க

இரட்டை கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சிறுவன் மீண்டும் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் இரட்டைக் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஒரு சிறுவன், 15 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க