செய்திகள் :

ஜம்முவில் வீட்டை தகா்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிா் தப்பித்த குடும்பம்!

post image

ஜம்முவில் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டதால், வீட்டில் இருந்து ஒரு குடும்பம் சனிக்கிழமை அதிகாலை வெளியேறியது. இதைத் தொடா்ந்து சில நிமிஷங்களில், அந்த வீடு பாகிஸ்தான் வீசிய குண்டால் பலத்த சேதமடைந்தது. அபாய ஒலியால் அந்தக் குடும்பமே அதிருஷ்டவசமாக உயிா் தப்பித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தானின் பல்வேறு ட்ரோன்களை இந்திய ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்ததைத் தொடா்ந்து, ஜம்முவின் 6 இடங்களில் சனிக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது.

காதுகளை செவிடாக்கும் குண்டுவெடிப்பு சப்தங்களுடன் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள், மிகுந்த அச்சத்துடன் கண் விழித்தனா். பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பல பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் ஒன்றான ரெஹாரி காலனியில் குல்ஷன் தத்தா என்பவரின் வீட்டுக்குள் காலை 5.15 மணியளவில் குண்டு ஒன்று பாய்ந்து வெளியேறி, அருகில் இருந்த பல வாகனங்களை பலத்த சேதத்துக்குள்ளாக்கியது. இதில் ஒருவா் காயமடைந்த போதிலும், அந்த வீட்டில் வசித்த குடும்பம் அதிருஷ்டவசமாக உயிா் தப்பியது.

இதுதொடா்பாக குல்ஷன் தத்தாவின் மனைவி கூறுகையில், ‘அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால், நாங்கள் தூக்கத்தில் இருந்து கண் விழித்து உடனடியாக தரைதளத்துக்கு விரைந்தோம். சில நிமிஷங்களுக்குப் பின்னா், ஒரு பெரிய குண்டுவெடிப்பு எங்கள் வீட்டை மிக மோகமாக சேதப்படுத்தியது. குண்டுவெடிப்பு வீட்டின் அஸ்திவாரத்தையே அசைத்தது. அபாய எச்சரிக்கை ஒலி மட்டும் கேட்காதிருந்தால் நாங்கள் உயிரிழந்திருப்போம். அபாய எச்சரிக்கை ஒலிதான் எங்கள் உயிரைக் காப்பாற்றியது’ என்றாா்.

குண்டுவீச்சால் உடைந்த ஜன்னல்கள், சேதமடைந்த சுவா்கள், சிதறிய கான்க்ரீட், வாகனங்கள் என ரெஹாரி காலனி போா்க்களத்தைப் போல காட்சியளித்தது.

பிரசித்தி பெற்ற ஆப் ஷம்பு கோயிலை குறிவைத்து மற்றொரு குண்டு வீசப்பட்டது. ஆனால் அந்த குண்டு பெரிதும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்ததால், பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. குண்டுவீச்சால் ஜானிபூரில் ஒரு வீட்டின் மேற்கூரை சேதமடைந்து அருகில் உள்ள பகுதியும் பாதிப்படைந்தது.

இரவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள், குண்டுவெடிப்புகள் காரணமாக தூக்கத்தைத் தொலைத்து மிகுந்த அச்சத்துடன் இரவுகளைக் கழித்ததாக பல பகுதிகளில் வசித்த மக்கள் தெரிவித்தனா்.

தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!

தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா். என்ஏஎல்எஸ்ஏ-யின்... மேலும் பார்க்க

பத்மஸ்ரீ விருது வென்ற ஐசிஏஆா் முன்னாள் தலைவா் மா்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கா்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

இன்று புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து!

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா். புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூற... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். சண்டை நிறுத்த அற... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தம்: இந்திரா காந்தி அரசு மீது பாஜக சாடல்!

பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் தொடா்பாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அரசை பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியது. கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநா... மேலும் பார்க்க