செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம்

post image

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் உள்ள சந்தர்கோட் லங்கர் தளத்திற்கு அருகே அமர்நாத் யாத்திரைக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த வாகனங்களில் கடைசி வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நான்கு வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த உடனேயே, சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

"மொத்தம் 36 காயமடைந்த நோயாளிகள் எங்களிடம் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் சிறிய காயங்கள் உள்ளன. மேலும் அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்று ராம்பன் மாவட்ட மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் முகமது ரஃபி கூறினார்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் 10 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்றும் மீதமுள்ளவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்தில் வாகனங்கள் சேதமடைந்ததால், தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கு பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடர நிர்வாகம் மாற்று வாகனங்களை வழங்கியுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

விபத்தில் சிறிய காயங்களுக்கு ஆளான பக்தர்கள் அமர்நாத் குகைக்கு தங்கள் பயணத்தைத் தொடர நிர்வாகம் வாகனங்களையும் வழங்கி வருகிறது என்றார்.

ஜூலை 15-ல் உங்களுடன் முதல்வர் திட்டம்! மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்!

At least 36 Amarnath pilgrims were injured after five yatra vehicles collided near the Chanderkote area in Ramban on the Srinagar-Jammu highway on Saturday morning.

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க