செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

post image

தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சாலைகளில் மழை நீர் தேங்குவதால், வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச்செல்லப்படும் என்ற அபாயம் உள்ளதால் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் நெடுஞ்சாலையில் ஹைதராபாத் - நிஜாமாபாத் இடையேயான சாலை வெள்ளத்தில் மூழ்கியதாலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் தோஹா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மூன்றாவது நாளாக ஜம்முவின் பெரும்பாலான பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், அதன் வழியே செல்லும் சாலைகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. ராம்பன் மாவட்டத்திலுள்ள சந்தர்கோட், கேலாமோர், செஸ்மா ஆகிய பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 250 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜம்முவின் உத்தம்பூர் பகுதியிலும் வாகனப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உத்தம்பூர் பகுதி வழியே செல்லும் நதியில் 20 அடிக்கு மேலே நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள செனாப் கால்வாயும் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளது.

இதையும் படிக்க | பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

floods disrupting normal life and forcing the closure Jammu-Srinagar highway

நீதிபதி தலையீடு: கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாய உறுப்பினா் புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா, ஒரு வழக்கில் ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட மிக மூத்த நீதிபதி ஒருவா் தன்னை அணுகியதாகக் குற்ற... மேலும் பார்க்க

மாடுகளை வெட்டுவது அமைதியை சீா்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம்

‘இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும்’ என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஹரிய... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவா் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சித்தோா்கா் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவா் உயிரிழந்தனா். இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மனீஷ் திரிபாதி க... மேலும் பார்க்க

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தெருவோர கடைக்காரா்களுக்கான பிரதமரின் கடன் தீட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயா்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய ... மேலும் பார்க்க

50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீா்வு: மத்திய அரசு நம்பிக்கை

‘அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. மேலும், ‘இந்... மேலும் பார்க்க

‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது’

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்த பேச... மேலும் பார்க்க