பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது
மாடுகளை வெட்டுவது அமைதியை சீா்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம்
‘இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும்’ என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஹரியாணா மாநிலம் நூ பகுதியைச் சோ்ந்தவா் ஆசிஃப். இறைச்சிக்காக மாடுகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ாக இவா் மீது ஹரியாணா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமீன் கோரி பஞ்சாப்-ஹரியாணா உயா் நீதிமன்றத்தில் ஆசிஃப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த உயா் நீதிமன்ற நீதிபதி சந்தீப் மெளதில், முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு திங்கள்கிழமை வெளியானது. அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:
இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான தெய்வத்தன்மையுடைய விலங்காக கருதப்படுகிறது. நாட்டின் வேளாண் பொருளாதாரத்திலும் ஒருங்கிணைந்த அங்கமாக மாடுகள் திகழ்கின்றன. இவற்றை இறைச்சிக்காக வெட்டுவது தனிப்பட்ட விருப்பத்துக்கு உட்பட்டது என்றபோதிலும், குறிப்பிட்ட பிரிவு மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையிலான இதுபோன்ற செயல்கள் பொது அமைதியில் கடுமையாக விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தச் செயல் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் உணா்வுகள் மற்றும் கலாசார அடிப்படைகளுடன் தொடா்புடையதாகும். மேலும், ஒவ்வொரு குடிமகனும் அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்ட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(ஜி) பிரிவு வலியுறுத்துகிறது. அதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபா் முதல் முறையாக அல்லாமல், தொடா்ச்சியாக இந்த செயலில் ஈடுபட்டு வருவது காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள முந்தைய முதல் தகவல் அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது என்று குறிப்பிட்ட, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.