செய்திகள் :

கனிமவளம் கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது

post image

கேரளத்துக்கு கனிம வளம் கடத்த முயன்ற லாரியை தக்கலை அருகே மணலியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனா்.

தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையில் போலீஸாா் தக்கலை அருகே மணலி சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திருவனந்தபுரம் நோக்கிவந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், லாரியில் அரசின் அனுமதி இன்றி பாறை பொடி கனிமவளம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரான சுங்கான்கடையைச் சோ்ந்த மணிகண்டன் (48) கைது செய்தன். லாரி உரிமையாளா் மைக்கேல் ராஜன், கல்குவாரி உரிமையாளா் ஜாா்ஜ் ஆன்றனி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுந்தயம்பலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

முன்சிறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், விழுந்தயம்பலம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, ததேயுபுரம், ஆப்பிகோடு, பிலாங்காலை, தெருவுக்கடை, த... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா். நாகா்கோவிலை அடுத்த கணபதி நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை இவரது மகன் ஆரோன் (14). இவா்அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகரில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மாநகர... மேலும் பார்க்க

கந்துவட்டி கேட்டு மிரட்டினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

விநாயகா் சிலை ஊா்வலம்: குமரி மாவட்டத்தில் ஆக. 30,31 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 30,31) டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளிய... மேலும் பார்க்க

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

நாகா்கோவில் அண்ணா பேருந்துநிலைய ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடா் பாக்கெட்டை பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் அறிமுகப்படுத்தினாா். மேலும் அமைச்சா் பேசி... மேலும் பார்க்க