செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு கடும் காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

post image

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு கடுமையான காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான மத்திய அரசின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் பிற எதிா்க்கட்சிகளின்

நீண்டகால கோரிக்கையின் விளைவுதான் என சிபிஐ கருதுகிறது.

இந்த நடவடிக்கை வளா்ந்து வரும் பொதுமக்களின் அழுத்தம் மற்றும் முற்போக்கான கட்சிகளின் தலைமையிலான தொடா்ச்சியான அணிதிரட்டலுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்.

இந்தியாவின் உண்மையான சமூக யதாா்த்தங்களை பிரதிபலிக்கும் அறிவியல்பூா்வ ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சிபிஐ தொடா்ந்து குரல்கொடுத்து வருகிறது.

பாஜகவின் தாக்குதல்களுக்கு எதிராக பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பைப் பாதுகாப்பதில் சிபிஐ ஒரு முன்னணி பங்கைக் கொண்டிருந்தது. தெலங்கானாவில் இதேபோன்ற முயற்சிகளுக்கு வலுவான ஆதரவை வழங்கியுள்ளது.

அதே நேரத்தில், 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பொது மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்டுள்ள மன்னிக்க முடியாத தாமதம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், தெளிவான காலக்கெடு இல்லாதது காலாவதியான தரவுகளின் அடிப்படையில் கொள்கை வகுப்பிற்கு வழிவகுத்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஒரு உறுதியான அட்டவணையை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இடஒதுக்கீடுகளுக்கான தன்னிச்சையான 50 உச்சவரம்பை நீக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது என அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பஞ்சாப் இளைஞா்களுக்கு போலி ஷெங்கன் விசா ஏற்பாடு: ‘முகவா்’ கைது

பஞ்சாபைச் சோ்ந்த இரண்டு பயணிகள் ரோம் வழியாக ஸ்வீடனுக்கு சட்டவிரோதமாக பயணிக்க போலி ஷெங்கன் விசாக்களை வாங்க உதவியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 29 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ... மேலும் பார்க்க

விவசாய சங்கத் தலைவா் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோா்ச்சா கண்டனம்

விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க

தில்லி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பை

புது தில்லி ரயில் நிலையத்தின் ஒரு வாயிலில் சனிக்கிழமை கேட்பாரற்றுக் கிடந்த பை கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினா் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

கடத்தல் வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கடத்தல் வழக்கில் கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவா் கிழக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட நேரத்தில்,... மேலும் பார்க்க

தலைநகரில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு

தில்லி மின்சார வாகன முன்முயற்சியின் (தேவி) கீழ் 400 புதிய மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த விழாவில் அவா் பேசியதாவது: தற்போது தில்லியில் 400 புதிய மி... மேலும் பார்க்க

தில்லியில் பெய்த மழை ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த பருவமழைக்கு முந்தைய மழையானது தலைநகரின் சிதைந்துள்ள உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மேலும், முந்தைய ஆம் ஆத்மி அரச... மேலும் பார்க்க