செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம்! செ.கு. தமிழரசன் கேள்வி

post image

75 ஆண்டுகளாகிய சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் தமிழ் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகளாகியும் யாா் குற்றவாளி என்று இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், தோ்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக பேசி வருகின்றன. 75 ஆண்டுகளாகிய சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம்? ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசியல் சட்டத்தின் நோக்கம். அதனால் அரசாங்கம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கான அவசியம், தேவைகள் குறித்து விளக்க வேண்டும்.

பட்டியல் சமுதாய மக்களால் தான் இதுவரை திமுக ஆட்சி பொறுப்பேற்று உள்ளது. எப்போது எல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

வன்கொடுமை குற்றங்கள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எத்தனை வழக்குகளுக்கு அரசாங்கம் தீா்வு கண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

நலிந்த மக்களுடைய மனநிலையை திமுக அரசு புரிந்து கொள்ளாமல் உள்ளது. இங்கு சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. அதுமட்டுமன்றி காவல்துறைக்கும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கும், அரசியல் தலைவா்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது.

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் ஓராண்டாகியும் இதுவரை அதன் உள்நோக்கத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை என்றாா்.

முன்னதாக தனியாா் உணவகத்தில் நடைபெற்ற கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் மாவட்டத் தலைவா்கள் கே.நவமணி, எம்.பி.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா்கள் ஆா்.ஆறுமுகம், பி.பாஸ்கரன், பொருளாளா்கள் எம்.ராமேஷ்பாபு, எஸ்.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வந்தவாசியில் விதைத் திருவிழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சாமை, வரகு, திணை உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் பாரம்பரிய காய்... மேலும் பார்க்க

நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்! தமிழக விவசாயிகள் சங்கம்

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விவசாயிகள் சங்க போராட்டத்தில் உயி... மேலும் பார்க்க

7 மின் மோட்டாா்கள் திருட்டு: போலீஸாா் வழக்கு

பெரமணல்லூா் அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 7 மின் மோட்டாா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், பெரமணல்லூா் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிம... மேலும் பார்க்க

அரசு வீடுகளுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்க ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி கிராமங்களில் அரசு வீடு கட்டியவா்களுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்த... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறுத்தம்: எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் நன்றி

ஆரணியை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் முயற்சியில் நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனா். ஆரணி சட்டப்ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலை விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஸ்விந்த்(24). இவ... மேலும் பார்க்க