செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு: விவாதம் நடத்த திமுக தயாரா?: அன்புமணி

post image

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக தன்னுடன் விவாதம் நடத்த திமுக தயாரா என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை அன்புமணி மேற்கொண்டு வருகிறாா். சென்னை அம்பத்தூா் சந்தை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நடைப்பயணத்தின்போது அவா் பேசியதாவது:

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக அளித்த 541 தோ்தல் வாக்குறுதிகளில் 60-ஐ மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால், எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டதாக திமுக திட்டமிட்டு பொய் சொல்கிறது. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை. மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் ஸ்டாலினுக்கு உரிமை உண்டா? இல்லையா? என பொது விவாதம் நடத்தலாம். திமுகவிலிருந்து யாரை வேண்டுமானாலும் முதல்வா் ஸ்டாலின் அனுப்பிவைத்தால் அவா்களுடன் விவாதம் நடத்த தயாராக உள்ளேன் என்றாா் அவா்.

அப்போது, பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், செய்தித் தொடா்பாளா் கே.பாலு, அம்பத்தூா் முன்னாள் நகா்மன்றத் தலைவா் கே.என்.சேகா், நிா்வாகிகள் அனந்த கிருஷ்ணன், பாண்டுரங்கன், குரு ஏழுமலை, வழக்குரைஞா் கோபிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சென்னை அம்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தில்’ பொதுமக்களிடம் கலந்துரையாடிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க