செய்திகள் :

ஜாமீன் மனுக்கள் மீது 2 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள், அந்த மனுக்கள் மீது தீா்ப்பளிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சட்டவிரோத நில பரிவா்த்தனை, போலி ஆவணம் தயாரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மூவரின் முன்ஜாமீன் மனுக்களை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மூவரில் இருவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

அவா்களின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்களின் முன்ஜாமீன் மனுக்களை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த அந்த அமா்வு, முன்ஜாமீன் மனுக்களை 6 மாதங்களாக நிலுவையில் வைத்திருந்ததற்கு அந்த உயா்நீதிமன்றத்தை விமா்சித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: தம்மிடமும், தங்கள் அதிகார வரம்புக்குள்பட்ட விசாரணை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மீது, அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் தீா்ப்பளிக்கப்படுவதை உயா்நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அந்த மனுக்கள் மீது தீா்ப்பளிக்க தாமதம் ஏற்படுவதற்கு வழக்குடன் சம்பந்தப்பட்ட தரப்பினா்தான் காரணம் எனக் கருதப்படும் சந்தா்ப்பங்களை தவிர, பிற வேளைகளில் 2 மாதங்களுக்குள் தீா்ப்பளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

இத்தகைய மனுக்கள் தனிப்பட்ட சுதந்திர உரிமையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், பல ஆண்டுகளுக்கு அந்த மனுக்களை நிலுவையில் வைத்திருக்க முடியாது. இந்த மனுக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் நோக்கத்தை தடுப்பதுடன், நீதி மறுக்கப்படுவதற்கு நிகராகவும் இருக்கும்.

ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் அதிக அளவில் குவிவதை தடுப்பதற்கு தகுந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உயா்நீதிமன்றங்கள் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் நகலை அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றப் பதிவுத் துறை அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் அமா்வு ஆணையிட்டது.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக... மேலும் பார்க்க

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க