செய்திகள் :

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

post image

கொல்கத்தா: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சீர்திருத்தத்தால் நிகர நிதி தாக்கமானது ஆண்டுக்கு ரூ. 48,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சி மற்றும் நுகர்வு ஊக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது, குறைந்த வருவாய் இழப்பானது ரூ. 3,700 கோடியாக இருந்தாலும், நிதி பற்றாக்குறையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தற்போதுள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை இரண்டு அடுக்காக மத்திய அரசு மாற்றியமைத்தது. ஜிஎஸ்டி வரியானது 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பொருள்களுக்கு மட்டும் 40 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் முக்கியமான செலவுகள் குறைக்கப்பட்டிருப்பது, வங்கித் துறையில் நேர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, அதன் சராசரி 14.4 சதவிகிதமாக இருந்தது, தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் மூலம் 9.5 ஆகக் குறைந்துள்ளது.

முன்னதாக 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கபட்டது.

தற்போது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் 295 அத்தியாவசியப் பொருள்களின் வரி விகிதமானது 12 -இல் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த நிதியாண்டில் பணவீக்கமானது 25 முதல் 30 சதவிகிதம் வரை குறையக் கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீடு 2026 - 27 வரையிலான காலகட்டத்தில் 65 புள்ளிகள் முதல் 75 புள்ளிகள் வரை இருக்கக் கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

GST reforms will cause revenue loss of Rs 3,700 crore to the government: SBI

இதையும் படிக்க : ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பொருளாதாரக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதாவது, பள்ளிகளின் எண்ணிக்கையை விட... மேலும் பார்க்க

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க