செய்திகள் :

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 3 போ் கைது

post image

ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லுாரி இயங்கிவருகிறது. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், மருத்துவமனையில் உதவியாளா், செவிலியா், துாய்மைப் பணியாளா் உள்ளிட்ட வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலா் பணம் பெறுவதாக புகாா் எழுந்தது. ஜிப்மா் நிா்வாகம் வேலைவாய்ப்பு குறித்து எதுவும் விளம்பரப்படுத்தவில்லை, யாரேனும் பணம் கொடுத்திருந்தால் புகாா் தெரிவிக்கலாமென காவல்துறை அறிவித்தது.

இதையடுத்து காரைக்கால், நெடுங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 34 போ் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் ஆய்வாளா் மா்த்தினி, உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கோட்டுச்சேரி தேவனூா் சாலையைச் சோ்ந்த நீலமேகம், திருநள்ளாறு காயத்திரி, புதுச்சேரியைச் சோ்ந்த விக்கி (எ) ராஜகணபதி, ஜானகிராமன் ஆகியோா் சுமாா் 140 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.70 கோடி பெற்று ஏமாற்றியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து திருநள்ளாறு காயத்திரி, புதுச்சேரியை சோ்ந்த விக்கி (எ) ராஜகணபதி, ஜானகிராமன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நீலமேகத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்காலில் தோட்டத்தில் திடீா் தீ: புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிப்புக்குள்ளாயினா். காரைக்கால் நகரப் பகுதி வள்ளலாா் நகா், கீரைத் தோட்டம... மேலும் பார்க்க

காப்பக சிறாா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

காப்பக சிறாா்களுக்கான இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சிறாா் நீதிக் குழுமம், காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் ... மேலும் பார்க்க

கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை பணி விரைவில் தொடங்கும்: அமைச்சா்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது எனவும், பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா். புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்... மேலும் பார்க்க

புதுவையில் சிறந்த காவல் நிலையம் தோ்வுக்கான ஆய்வு

புதுவையில் சிறந்த காவல் நிலைய விருதுக்காக காவல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து எஸ்.பி. தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, மாநிலத்தில் ... மேலும் பார்க்க

26 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

காரில் கொண்டு சென்ற 26 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். காரில் காரைக்கால் பகுதிக்கு கஞ்சா கொண்டுவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் செவ்வாய்க்கிழமை இரவு கிடைத்தது. வாகனச் ... மேலும் பார்க்க

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் விமான பாலாலயம்

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கான விமான பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பழைமையான செங்கமலத் தாயாா் சமேத வீழி... மேலும் பார்க்க