செய்திகள் :

ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

post image

இங்கிலாந்து வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது.

தேசிய அணிக்காக விளையாடவுள்ள காரணத்தினால் ஜேக்கோப் பெத்தேல் தாயகம் திரும்பவுள்ளார். அவர் நாளை மறுநாள் (மே 24) தாயகம் திரும்பவுள்ளார். அவருக்குப் பதிலாக நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!

இது தொடர்பாக ஆர்சிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்குப் பதிலாக அணியில் டிம் செய்ஃபர்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேக்கோப் பெத்தேல் தேசிய அணிக்காக விளையாடுவதற்காக நாளை மறுநாள் தாயகம் திரும்பவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்னும் இரண்டு லீக் போட்டிகளில் விளையாடவுள்ளது. நாளை நடைபெறவுள்ள லீக் போட்டியில் பெங்களூரு அணி ஹைதராபாதை எதிர்த்து விளையாடுகிறது. அதன் பின், வருகிற மே 27 ஆம் தேதி லக்னௌவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஜேக்கோப் பெத்தேல் தாயகம் திரும்புகிறார். ஆர்சிபி அணிக்காக அவர் பிளே ஆஃப் போட்டிகளில் இடம்பெறமாட்டார்.

மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள டிம் செய்ஃபெர்ட் இதுவரை 66 டி20 போட்டிகளில் விளையாடி 1,540 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பாக அவர் ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

ஆர்சிபி அணிக்காக ரூ.2 கோடிக்கு டிம் செய்ஃபெர்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் ... மேலும் பார்க்க

லக்னௌவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் லக்னௌவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையைப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ... மேலும் பார்க்க

தொடக்கம் சரியாக அமைந்தது, தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தில்லி கேபிடல்ஸ் மற... மேலும் பார்க்க

பிளே ஆஃபில் மும்பை; வெளியேறியது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ûஸ புதன்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை, கடைசி அணியாக பிளே ஆஃபில் நுழைந்தது. டெல்லி ... மேலும் பார்க்க

இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அழுத்ததிற்கு உள்ளாகாமல் எப்போதும்போல விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, உர... மேலும் பார்க்க

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மதீஷா பதிரானா..! சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?

சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியுள்ளார். 22 வயதாகும் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியில் 2022-இல் அறிமுகமானார்.... மேலும் பார்க்க