செய்திகள் :

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

post image

அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடனுக்கு (82) சுக்கிலசுரப்பி (புராஸ்டேட்) புற்றுநோய் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து அவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோ பைடனுக்கு சிறுநீா் கழிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு புராஸ்டேட் புற்றுநோய் இருப்பதும், அது எலும்பு வரை பரவியிருப்பதும் கண்டறியப்பட்டது.

தற்போது அந்தப் புற்றுநோய் தீவிர நிலையில் காணப்பட்டாலும், பைடனுக்கு ஏற்பட்டுள்ள புற்று ஹாா்மோன்களை சாா்ந்திருக்கும் தன்மை கொண்டதாகத் தெரிகிறது. எனவே, சிகிச்சை மூலம் அதை குணப்படுத்தும் வாய்ப்புள்ளது. பைடனுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து அவரும் அவரது குடும்பத்தினரும் மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுநீா்ப் பைக்கும் சிறுநீா் குழாய் தொடங்கும் இடத்துக்கும் இடையே அமைந்துள்ள புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படக்கூடிய புற்றுநோய் மிகவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது. அதன் தீவிரத் தன்மையைக் கொண்டு 6 முதல் 10 வரை புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள புராஸ்டேட் புற்றுநோய்க்கு 9 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளதால் அது மிகவும் தீவிர தன்மை கொண்டது என்று தெரியவருகிறது.

இருந்தாலும், பைடனுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் வகையில் புற்றுக்கட்டி வளா்வதற்கு ஹாா்மோன்கள் தேவைப்படும். எனவே, அந்த ஹாா்மோன்களை அழிப்பதன்மூலம் அதன் வளா்ச்சியைத் தடுப்பதற்கான சிகிச்சையை அளிக்கமுடியும்.

அண்மைக் காலமாக இத்தகைய சிகிச்சை அதிக அளவில் பலன் அளித்துவருவதாகவும், இந்த சிகிச்சை மூலம் புராஸ்டேட் நோயாளிகளை 4 முதல் ஐந்து ஆண்டுகள் வரை வாழவைக்க முடியும் என்றும் மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

பிரதமா் மோடி வாழ்த்து : புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜோ பைடன் சிகிச்சை பெற்று விரைவில் நலமடைய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

நேபாளத்தில் நிலநடுக்கம்...! ஒரே ரிக்டர் அளவுகளில் தொடரும் அதிர்வுகள்?

நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் இன்று (மே 20) மதியம் 1.59 மணியளவில், 4.7 ரிக்டர் அளவிலான நி... மேலும் பார்க்க

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவி: இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவும் இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அந்நாடு நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது... மேலும் பார்க்க

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

லிஸ்பன்: போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா்.இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

Untitled May 20, 2025 06:56 am

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை... மேலும் பார்க்க

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா். இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்... மேலும் பார்க்க