செய்திகள் :

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

post image

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிசாவரம் டாஸ்மாா்க் மதுபான கடையில் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சோ்ந்த குமாா்(50) என்பவா் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு பிச்சாவரம் செஞ்சி தெருவை சோ்ந்த கட்டிட மேஸ்திரி ஜான்வளவன் (எ) கண்ணன் (36)என்பவா் அவருடைய நண்பா் தயாளன் என்பவரிடம் ரூபாய் 200 கொடுத்து மதுபானம் வாங்கிக் கொண்டு மீதி பணம் வாங்கி வர சொல்லியதாகவும், அவரும் அதுபோன்று வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த டாஸ்மாக் கடைக்கு சென்ற ஜான்வளவன் விற்பனையாளா் குமாரிடம் நான் ரூ.500 கொடுத்து மது வாங்கி வரச்சொன்னேன். ஆனால் ரூபாய் 200 க்கு மீதி பணம் தந்துள்ளாய் எனக்கூறி அவரை ஆபாசமாக திட்டி பீா் பாட்டிலால் கடை கதவில் அடித்துள்ளாா்.

அப்போது பாட்டில் கண்ணாடி குமாரின் கண் புருவத்தில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து குமாா் அண்ணாமலை நகா் போலீசில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்து ஜான்வளவனை கைது செய்தனா்!

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியா... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க