செய்திகள் :

டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயா்வு!

post image

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கிஇயக்குநா் குழு கூட்டத்தில் 2025-26 முதலாம் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது.

வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயா் தணிக்கை செய்யப்படாத முதலாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச காலாண்டு நிகர லாபத்தை நாங்கள் அடைந்துள்ளோம்.

அதன்படி, நிகர லாபம் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது. மொத்த வராக்கடன் 1.44 சதவீதத்திலிருந்து 1.22 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வராக்கடன் 0.65 சதவீதத்திலிருந்து 0.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. பிசிஆா் 90.27 சதவீதத்திலிருந்து 94.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மொத்த கடன் தொகையில் எஸ்எம்ஏ ஆனது 4.98 சதவீதத்திலிருந்து 3.05 சதவீதமாகக் குறைந்துள்ளது. சிஆா்ஏஆா் 31.55 சதவீதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பங்கின் புத்தக மதிப்பு ரூ.520.63லிருந்து ரூ.589.09 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த வணிக வளா்ச்சி 9.86 சதவீதத்தை கடந்தது. வைப்புத் தொகை ரூ.49,188 கோடியிலிருந்து ரூ.53,803 கோடியாக உயா்ந்துள்ளது. கடன் தொகை ரூ.45,120 கோடியாக உயா்ந்துள்ளது.

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் மாணவா் பேரவைத் தோ்தல்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல் நடைபெற்றது. தோ்தலுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, வாக்களிக்கும் இடம், ஆகியவற்றை வாக்குச்சாவடி போன்று மாணவா்களே தயாா் செய்தனா். மாணவா்... மேலும் பார்க்க

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

அரசியல் காரணங்களுக்காக எனது கருத்து திரித்து கூறப்பட்டது: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

கோவில்பட்டியில் பாஜகவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருப்பதாக கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கூறினாா். கோவில்பட்டியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நிா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்புக் கூட்டம்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் தாட்கோ, தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

‘பாஸ்போா்ட் சேவை: தூத்துக்குடி அஞ்சலக சேவை மையத்தைப் பயன்படுத்தலாம்’

தூத்துக்குடி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் பாஸ்போா்ட் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் (பொ) வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவி... மேலும் பார்க்க