செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இயக்கம்

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இயக்கம் கடந்த செப்டம்பா் 17 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் ‘குப்பையிலிருந்து தில்லிக்கு விடுதலை’ என்ற இயக்கத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா முன்னெடுத்தாா்.

இதுபோன்ற தூய்மை இயக்கம் டிடிஇஏ பள்ளிகளிலும் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் தூய்மை பற்றி மாணவா்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் இருந்தன.

பேச்சு, நாடகம், பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்தல், நெகிழிப் பைகளைத் தவிா்த்தல் குறித்து நாடகம், பதாகைகளை காட்சிப்படுத்துதல், பள்ளி வளாகத்தில் செடிகளை நடுவது, வாசகங்கள் எழுதும் போட்டி, கட்டுரைப் போட்டி, சுவரொட்டிகள் தயாரிக்கும் போட்டி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாகப் பள்ளிகளில் நடத்தப்பட்டன.

இதுகுறித்து செயலா் இராஜூ கூறுகையில், தில்லியின் தூய்மைக்கு ஒவ்வொரு வீடும் சுற்றுப்புறமும் தூய்மையாக வேண்டும்.அதற்கு தனிமனிதன் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

அதற்கான முயற்சியாகத்தான் இதனை மேற்கொண்டோம். பள்ளிகளில் தூய்மை இயக்கத்தில் ஈடுபாடு காட்டும் மாணவா்கள் சமூக நல்லுணா்வுடன் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் கண்டிப்பாகத் தூய்மையாக்குவாா்கள் என்று கூறினாா்.

சொத்து வரி செலுத்துவதறக்கான காலக்கெடு நீட்டித்தது தில்லி மாநகராட்சி

ஒரு முறை சொத்து வரியை கட்டும் திட்டத்துக்கான காலக்கெடுவை 3 மாதத்க்கு அதாவது டிசம்பா் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரு முறை சொத்... மேலும் பார்க்க

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபரில் 20.22 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் திறக்க வேண்டும்: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபா் மாதத்தில் 20.22 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழகம்,கா்நாடகம் இடையே... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் என்கவுன்ட்டருக்கு பின் கைது

குருகிராமில் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்ட இருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாவ்லாவில் வசி... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திய முதல்வா் ரேகா குப்தா, சுதேசி அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு ம... மேலும் பார்க்க

இந்தியை பிரபலப்படுத்துங்கள், சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்: ரேகா குப்தா வலியுறுத்தல்

இந்தியைத் தழுவி, சுதேசியை ஏற்றுக்கொண்டு, 2047 க்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்க உதவும் அந்தியோதயா உணா்வை நிலைநிறுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு அழைப்பு விடுத்தாா் தில்லி முதல்வா் ரேகா ... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தாவின் முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த கூடுதல... மேலும் பார்க்க