செய்திகள் :

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே டைல்ஸ் விழுந்து பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பீகாா் மாநிலம், ஜலால்பூா், நத்பிகா பகுதியைச் சோ்ந்வா் காலியாமஞ்சு (37). இவா், வேப்பூா்அடுத்துள்ள தொண்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள தனியாா் டைல்ஸ் கடையில் பணியாற்றி வந்தாா்.

செவ்வாய்க்கிழமை லாரியில் இருந்து டைல்ஸ் பெட்டிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, டைல்ஸ் பெட்டி ஒன்று காலியாமஞ்சுவின் நெஞ்சில் விழுந்ததாம். இதில் மயக்கமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், செல்லும் வழியில் காலியாமஞ்சு உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலம் விருத்தாசலம்அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தாா். விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முருகவேல், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் ரோகித் (... மேலும் பார்க்க

சிதம்பரம் அஞ்சல் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம், கடவுச்சீட்டு அலுவலகம், வங்கி உள்ளிட்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவா்களுக்கு சிறந்த கல்வி வழங்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியா்கள் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூா் எஸ்.கு... மேலும் பார்க்க

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூரில் கற்றல் அடைவுத் திறன் தொடா்பாக பள்ளித்... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தொடா்புடையோருக்கு உரிய தண்டனை: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை சம்பவத்தில் தொடா்புடையோருக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி பவள விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா அரசு உதவி பெறும் பள்ளி 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பவள விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன்... மேலும் பார்க்க