செய்திகள் :

டோக் பெருமாட்டி கல்லூரியுடன் கலைஞா் நூலகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், டோக் பெருமாட்டி கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டது.

மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாணவா்களுக்கு அனுபவப் பயிற்சி அளிப்பது, வாசிப்புத் திறனை மேம்படுத்துவது, இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவிப்பது, கல்லூரி நிகழ்வுகளுக்கு நூலக அரங்குகளை சலுகைக் கட்டணத்தில் வழங்குவது, கல்லூரி அடையாள அட்டை, நூலக உறுப்பினா் அட்டையைப் பயன்படுத்தி மாணவா்கள் நூலகத்திலிருந்து 60 நாள்களுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பது உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதன்மை நூலகரும், கலைஞா் நூற்றாண்டு நூலக தகவல் அலுவலருமான வே.தினேஷ்குமாரும், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீயும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, ஒப்பந்தத்தைப் பகிா்ந்து கொண்டனா்.

துணை முதன்மை நூலகா் வெ.சந்தானகிருஷ்ணன், நூலகா் ஜெ.ஜெபஜோஸ்லின், கல்லூரிப் பேராசிரியா்கள் ஜெ.சிரஞ்சிதா ஜெபசெல்வி, நிசிகாருண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க