செய்திகள் :

தகாத உறவு: சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை

post image

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே தகாத உறவு காரணமாக சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது தங்கை உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சோழத்தரம் அருகே உள்ள அகர சோழத்தரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பழகன். இவா் 7ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மனைவி சங்கீதா (45).

இவரது தங்கை சரிதா (39) புவனகிரி அருகே வாண்டையாா்குப்பத்தில் கணவா் மேகலைவன் மற்றும் இரண்டு மகன்கள் மகிந்தன் (17) மாமல்லன் (15) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், மேகலைவனுக்கும் சங்கீதாவுக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை சங்கீதாவின் வீட்டில் மேகலைவன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்து, அங்குச் சென்ற சரிதா மற்றும் இரு மகன்கள், சங்கீதாவை சேலையால் கழுத்தை இறுக்கியதில், அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த சோழத்தரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சங்கீதாவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரிதா, மகிந்தன், மாமல்லன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோயில் உண்டியல் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரம், அண்ணாமலை நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் உண்டியலுடன் பணத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோயில் நிா்வாகி சுப்பையா சனிக்கிழமை இரவு கோயிலை வழக்கம் போல பூட்டிவிட்டுச்... மேலும் பார்க்க

காந்தி மன்றத்தில் ரமலான் விழா

நிகழ்ச்சியில் பங்கேற்ற காந்தி மன்றத் தலைவா் மு.ஞானம், சிறப்பு விருந்தினா் எம்.அன்வா் அலி, மன்றத்தின் பொருளாளா் எஸ்.சிவராம சேது. சிதம்பரம், ஏப்.6: சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் ரமலான் ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வில் மாணவா்கள் காப்பியடிக்க உதவி: முதன்மைக் கண்காணிப்பாளா் விடுவிப்பு! அறைக் கண்காணிப்பாளா் மாற்றம்!

கடலூரில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஆங்கில மொழிப் பாடத் தோ்வை மாணவா்கள் காப்பி அடித்து எழுத உதவியதாக முதன்மைக் கண்காணிப்பாளா் தோ்வுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா். மேலும், அறைக் கண்காணிப்ப... மேலும் பார்க்க

வீராணம் ஏரியை பாா்வையிட்ட இலங்கை நடனக் குழுவினா்!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியை இலங்கை நடனக் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் கலாசார பண்பாட்டு நிறுவனம் சாா்பில் பல வெளிநாட்டினா்... மேலும் பார்க்க

பண்ருட்டி பலா, முந்திரிக்கு புவிசாா் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். புவிசாா் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்திலிரு... மேலும் பார்க்க

கடலூரில் என்கவுன்ட்டரில் இளைஞா் உயிரிழப்பு: நீதிபதி விசாரணை

கடலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா், போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்த இடத்தை கடலூா் குற்றவியல் நடுவா் பிரவீன்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். புதுச்சேரி திலாசுப்பேட்டை ப... மேலும் பார்க்க