செய்திகள் :

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

post image

புதுதில்லி: வலுவான தொழில்துறை தேவை, பலவீனமான டாலர் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், பாதுகாப்பான காரணங்கள் உள்ளிட்டவையால் வரும் மாதங்களில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.5 லட்சமாக உயரக்கூடும் என்று மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிதிச் சேவைகளின் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளாவிய சந்தைகளில், வெள்ளை உலோகம் அவுன்ஸ் ஒன்றுக்கு 50 அமெரிக்க டாலர் அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மற்ற முதலீடு பொறுத்த வரையில், வெள்ளி உலோகம் இந்த ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 37 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது.

முதலீடு மற்றும் தொழில்துறை தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் முக்கிய பொருளாதாரங்களில் பணவியல் கொள்கை தளர்த்தலுக்கான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக வெள்ளை உலோகம் பயனடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 88.5 ஆக வர்த்தகம் செய்யப்பட்டால், உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் விலை படிப்படியாக கிலோவுக்கு ரூ.1,35,000 ஆகவும், பிறகு 12 மாதங்களில் ரூ.1,50,000 ஆக நகரும்.

சர்வதேச சந்தைகளில், காமெக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு $45 ஆகவும், பிறகு அடுத்த கட்டத்தில் அவுன்ஸ் ஒன்றுக்கு $50 ஆகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் கணித்துள்ளது.

ரஷ்யா சமீபத்தில் வெள்ளி கொள்முதல் செய்வதை வெளிப்படையாக அறிவித்த முதல் நாடாக மாறியது. அதே வேளையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 535 மில்லியன் அமெரிக்க டாலரையும் ஒதுக்கியுள்ளது.

செளதி அரேபியா மத்திய வங்கியும் இந்த ஆண்டு வெள்ளி உடன் இணைக்கப்பட்ட பரிமாற்ற வர்த்தக நிதிகளில் கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா 3,000 டன்களுக்கும் அதிகமான வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது.

இதையும் படிக்க: ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

இந்தியாவில் 10 லட்சம் மின்சார வாகனங்கள் அமோக விற்பனை!

புதுதில்லி: 2024-25 ஆம் ஆண்டில் நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இந்த ஆட்டோமொபைல் சந்தை.அதே வேளையில், இந்தியா தற்போது உலகில் வேகமாக வளர... மேலும் பார்க்க

வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து சற்றே மீண்டு வர்த்தகமானது. அந்நிய நிதி வரவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பு ஆகியவற்றால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய... மேலும் பார்க்க

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையாலும், உள்ளூர் வர்த்தகத்தில் ஐடி மற்றும் மூலதனப் பங்குகள் மீட்சியடைந்ததும், அடுத்த வாரம் நடைபெற உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விமர்சிக்கும் சாம்சங்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மின்னணு சந்தையில் அறிமுகமாகியுள்ளன. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்... மேலும் பார்க்க

அறிமுகமானது ஐபோன் 17! முன்பதிவு செய்தால் எப்போது கிடைக்கும்?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன் நேற்று (செப். 9) மின்னணு சந்தைகளுக்கு அறிமுகமானது. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய... மேலும் பார்க்க

புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 வரிசை பைக்குகள்!

யமஹா நிறுவனம் ஆர்15 வரிசையில் பைக்குகளை புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது.யமஹா நிறுவனம் ஆர்15 வரிசையில் ஆர்15எம், ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எஸ் ஆகிய மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.இந்த ந... மேலும் பார்க்க