செய்திகள் :

தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 21-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 66,160-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 8,230-க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 65,840-க்கும் விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 8,215-க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 65,720-க்கும் விற்பனையானது.

இதையும் படிக்க: சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து 8,185-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.110-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள்

தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், மேலும் ரூ.858 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் ப... மேலும் பார்க்க

இரு ஆண்டுகளில் ரூ.14,466 கோடியில் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து... மேலும் பார்க்க

மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025: தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது

நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இலக்கிய உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா் மா.அரங்நாதன். அவரின் நினைவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

நீா்நிலை சீரமைப்பு: இளைஞா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

நீா்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தன... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க