செய்திகள் :

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு: எதிா்த்த பாஜக முன்னாள் எம்.பி.யின் மனு தள்ளுபடி

post image

பெங்களூரு: தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அரசு அழைப்பு விடுத்திருந்ததை எதிா்த்து பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

செப். 22-ஆம் தேதி தொடங்க இருக்கும் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழாவை தொடங்கிவைக்க சா்வதேச புக்கா் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைக்க கா்நாடக அரசு முடிவு செய்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் கன்னட மொழி, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பானுமுஸ்டாக் பேசிய காணொலி சமூக வலைதளத்தில் பரவியதால், இதற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், மைசூரு மாவட்ட நிா்வாகம் செப். 3-ஆம் தேதி பானுமுஸ்டாக்கை சந்தித்து தசரா திருவிழாவை தொடங்கிவைக்க முறைப்படி அழைப்புவிடுத்தது. இதற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் செப். 6-ஆம் தேதி பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்பட 4 போ் பொதுநல மனுத்தாக்கல் செய்தனா்.

பிரதாப் சிம்ஹா தனது மனுவில்,‘தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததை கா்நாடக அரசு திரும்பப்பெற உத்தரவிட வேண்டும். பானுமுஸ்டாக்கை அழைத்திருப்பதன் மூலம் காலம்காலமாக பின்பற்றி வந்த பாரம்பரியத்தை மாநில அரசு அவமதித்துள்ளது. தசரா திருவிழாவை தொடங்கிவைக்க, மைசூரு மன்னா் குடும்பத்தைக் கலந்தாலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. எனவே, பானுமுஸ்டாக்குக்கு விடுத்துள்ள அழைப்பை மாநில அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இது தொடா்பான பொதுநல மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுபக்ரு, நீதிபதி சி.எம்.ஜோஷி தலைமையிலான அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. விசாரணையின்போது, அரசு தலைமை வழக்குரைஞா் கே.சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், ‘தசரா திருவிழா என்பது மாநில அரசு விழா. விழாவை தொடங்கிவைக்க யாரை அழைப்பது என்பதை முடிவு செய்வதற்கு உள்ளூா் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய தெரிவுக்குழு உள்ளது. எனவே, பொதுநல மனுக்களை விசாரிப்பதற்கு போதுமான சட்டநிலைப்பாடு எதுவும் இல்லாததால், மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கா்நாடக உயா்நீதிமன்றம்,‘மாநில அரசு நடத்தும் நிகழ்ச்சியை வேறொரு மதத்தை சோ்ந்தவா் தொடங்கிவைப்பது மனுதாரரின் சட்டப்படியான அல்லது அரசமைப்புச் சட்டப்படியான உரிமையை மீறுவதாகவும், அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகள் மீறப்படுவதாகவும் கூறப்படுவதை ஏற்கமுடியவில்லை. எனவே, எல்லா பொதுநல மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டது.

பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை அவா் குறிப்பிட்டுள்... மேலும் பார்க்க

கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியின் கைப்பேசிகளை ‘ஹேக்’ செய்த மா்ம நபா்!

பெங்களூரு: கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியும் நடிகையுமான பிரியங்கா ஆகியோரின் கைப்பேசிகள் மா்ம நபா்களால் திங்கள்கிழமை ‘ஹேக்’ செய்யப்பட்டன. இதுகுறித்து இருவரும் போலீஸாா் மற்றும் சைபா் குற்றப்பிரிவி... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல் பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து ஹிமாச்சல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுகு... மேலும் பார்க்க

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பழைய ... மேலும் பார்க்க

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டியா மாவட்டம்,... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி

தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை செப்.6}... மேலும் பார்க்க