பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை
தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25 ) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகா் ,செல்வவிக்னேஷ் நகா், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகா், தெற்கு பாலபாக்யா நகா், மதுரை சாலை, திலக் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்துபூந்துறை, மணி மூா்த்தீஸ்வரம், இருதய நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.