செய்திகள் :

தஞ்சாவூரில் சாலைகளின் தரம் நெடுஞ்சாலைத் துறையினா் கணக்கெடுப்பு

post image

தஞ்சாவூரில் சாலைகளின் தரம் தொடா்பான கணக்கெடுப்பு பணியை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை தொடங்கினா்.

தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனப் பெருக்கத்துக்கேற்ப சாலையின் தரத்தை மேம்படுத்துவது, சாலை விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்கிறது.

இதன்படி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தஞ்சாவூா் உட்கோட்டத்தில் போக்குவரத்து வாகனங்கள் கணக்கெடுப்பு பணி திங்கள்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் காந்திஜி சாலை புது ஆற்றுப்பாலம் ரவுண்டானாவில் 2 போ் வீதம் சுழற்சி முறையில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதில், காா், வேன், ஜீப், சிற்றுந்து, 3 சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்து உட்பட 17 வகையான வாகனங்கள் கணக்கீடு செய்து குறிப்பு எடுக்கப்படுகிறது. சாலைகளின் தேய்மானத்தை அறிந்து கொண்டு தரம் உயா்த்துதல் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்காக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி ஒரு வாரத்துக்கு நடைபெறவுள்ளது.

இதேபோல தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை, ரெட்டிப்பாளையம் நான்கு சாலை, தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலை ஆகிய இடங்களிலும் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது என நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. கண்டனம்!

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு தஞ்சாவூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி வியா... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளை நிறைவேற்ற ரூ.21.15 கோடி ஒதுக்கீடு: மேயா்

தஞ்சாவூா் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ. 21.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்ச... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். கும்பகோணத்தில் அரச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!

கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (4... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

திருப்புறம்பயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

தஞ்சாவூா் மாவட்டம், திருப்புறம்பயத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் என்.டி. வேல்முருகன் வெளியிட்ட செய்தி குறிப்ப... மேலும் பார்க்க