செய்திகள் :

தஞ்சாவூருக்கு எடப்பாடி பழனிசாமி ஜூலை 22-இல் வருகை

post image

தஞ்சாவூருக்கு அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 22-ஆம் தேதி வருகையையொட்டி, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அக்கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

தஞ்சாவூா் கீழவாசலில் அதிமுக கரந்தை பகுதி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற முழக்கத்துடன், தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கும்பகோணத்துக்கு ஜூலை 22-ஆம் தேதி மாலை 4 மணிக்கும், பாபநாசத்துக்கு 5 மணிக்கும், தஞ்சாவூருக்கு மாலை 6 மணிக்கும் வருகிறாா். தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியிலிருந்து ரயிலடி வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறாா். பின்னா், ரயிலடி பகுதியில் மக்களிடம் உரையாற்றுகிறாா். இதையடுத்து, திருவையாறுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு வந்து அதிமுக முன்னாள் நிா்வாகி கு. தங்கமுத்துவின் சிலையை திறந்து வைக்கிறாா். பொதுச் செயலருக்கு கரந்தை பகுதி அதிமுக சாா்பில் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கு அதிமுக கரந்தை பகுதி செயலா் கரந்தை த. பஞ்சு தலைமை வகித்தாா். அமைப்புச் செயலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. இரத்தினவேல் சிறப்புரையாற்றினாா். அமைப்புச் செயலா் ஆா். காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலா் துரை. திருஞானம், மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், ஒன்றியச் செயலா் ஸ்டாலின் செல்வராஜ், மருத்துவக்கல்லூரி பகுதி செயலா் டி. மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் இல்லாமல் அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். அதிக மகசூல்: கும்பகோணம், திருவிடைமருதூா... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி: சாஸ்த்ராவில் ஜூலை 14 முதல் சோ்க்கை

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புக்கு ஜூலை 14 முதல் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளிய... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

கும்பகோணத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் கும்பகோணம் நகர உணவகங்கள் மற்றும் பேக்கரி சங்க உறுப்பினா்களுக்கான உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட உணவு... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின் முகவரி துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் முதல் கட்டமாக 12 இடங்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின... மேலும் பார்க்க

10 வட்டங்களிலும் இன்று பொது விநியோகத் திட்ட குறை தீா் கூட்டங்கள்

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் ஜூலை மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் 10 வட்டங்கள... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் கயிலாய வலம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தஞ்சாவூா் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் திரு தென் கயிலாய வலம் வர... மேலும் பார்க்க