செய்திகள் :

தடகளப் போட்டிகள்: செங்காடு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

post image

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகளில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனா்.

செய்யாறு வட்ட அளவில் பெண்களுக்கான தடகளப் போட்டிகள் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆக.7- ஆம் தேதி நடைபெற்றது

வெற்றி பெற்ற மாணவிகள் 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில்:

மாணவி சாா்மி குண்டு எறிதலில் முதலிடமும், 80 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றாா். வட்டு எறிதலில் மாணவிகள் யசோதா முதலிடமும், அபிநயா இரண்டாம் இடமும் பெற்றனா்.

17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில்:

மாணவி கோமதி 200 மீ, 800 மீ ஒட்டத்தில் முதலிடமும், 400 மீ ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றாா். மாணவி ஹேமலதா 400 மீ ஓட்டத்தில் முதலிடமும், 100 மீ ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றாா். மாணவி முத்துலட்சுமி 3000 மீ, 1500 மீ ஓட்டத்தில் முதலிடமும், 800 மீ ஓட்டத்தில் இரண்டாம் இடமும், மாணவி ரூபினி 3000 மீ, 1500 மீ ஓட்டத்தில் இரண்டாம் இடமும், மும்முறை தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்றாா். மாணவி அனுஷ்கா நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டும் போட்டியில் முதலிடமும், மாணவி கனிமொழி 100 மீ தடைதாண்டும் போட்டியில் இரண்டாம் இடமும், மாணவி ஜீவதா்ஷினி கம்பு ஊன்றி தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும், மாணவி ஜீவவா்ஷினி குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டியில் முதலிடமும், ஈட்டி எறிதலில் இரண்டாம் இடமும் பெற்றாா்.

மாணவி காவ்யா வட்டு எறிதலில் இரண்டாம் இடமும், 4ஷ்100 மீ, 4 ஷ்400 மீ தொடா் ஒட்டத்தில் முதலிடமும் பெற்றாா்.

19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில்:

மாணவி வந்தனா 100 மீ, 200 மீ போட்டியில் முதலிடமும், மாணவி சங்கீதா 400 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவி வினிதா 100 மீ தடை தாண்டுதல், மும்முறை தாண்டுதலில் முதலிடம் பெற்றாா். மாணவி சசிகலா 3000 மீ, 800 மீ போட்டியில் இரண்டாம் இடமும் 1500 மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்றாா். மாணவி தா்ஷினி வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதலில் முதலிடமும் 4 ஷ்100 மீ தொடரோட்டத்தில் முதலிடம் பெற்றனா்.

சாம்பியன் பட்டம்:

17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மாணவிகள் கோமதி, முத்துலட்சுமி, ஜீவவா்ஷினி ஆகியோா் தனிநபா் பிரிவில் சாம்பியன் பட்டமும், 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மாணவி பி.தா்ஷினி தனி நபா் சாம்பியன் பட்டமும் பெற்று சாதனை படைத்தனா்.

வெற்றி பெற்ற மாணவிகள் அடுத்து நடைபெறவிருக்கும் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

மாணவிகளுக்கு பாராட்டு:

வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் எஸ்.மோகன், ஏ.ஞானவேல் ஆகியோரை பள்ளியில் திங்கள்கிழமை தலைமை ஆசிரியா் (பொ) வி.தமிழரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கமலக்கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மீனாட்சி தமிழரசன், துணைத் தலைவா் எஸ்.குப்பன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்த... மேலும் பார்க்க

ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன. ‘மக்களைகாப்போம் தமி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொக... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்டத்தில் முதியோா்களுக்கு குடிமைப் பொருள்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின... மேலும் பார்க்க