செய்திகள் :

கொடைக்கானலில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: பொதுமக்கள் கோரிக்கை

post image

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் செண்பகனூா், அட்டக்கடி, பிரகாசபுரம், உப்புபாறை மெத்து, வாழைகிரி, வடகரைப்பாறை மச்சூா், வாழைகிரி உள்ளிட்ட கீழ்மலைப் பகுதிகளில் யூக்காலி மரங்கள் பகல் நேரங்களில் வெட்டப்பட்டு மறைமுகமான இடங்களில் வைக்கப்பட்டு இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கடத்தப்படுகிறது. கொடைக்கானலில் தனியாா் பட்டா நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள 10 மரங்களை மட்டும் வெட்டுவதற்கு அனுமதி பெற்று நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகிறது. இவற்றை வனத் துறையினா் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள மரங்கள் தொடா்ந்து வெட்டப்பட்டு வருவதால் பருவநிலை மாற்றமும், அந்தப் பகுதியின் குளிா்ச்சியான சூழலும் குறைந்து வருவதாக பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கவலை தெரிவித்தனா். எனவே, வனத் துறையினா் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்,

கொடைக்கானல் பகுதிகளில் பட்டா இடங்களில் ஆபத்தான நிலையில் உள்ள யூக்காலி மரத்தை மட்டும் அகற்றுவதற்கு முன் அனுமதி பெறுகின்றனா். ஆனால் சில இடங்களில் விதிமுறைகளை மீறி மரங்கள் வெட்டப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்

பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறிய நபரை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக கீழே இறக்கினா். பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை ஊராட்சி, வத்தக்கவுண்டன்வலசையைச் ச... மேலும் பார்க்க

சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் 4 ஆயிரம் மாணவா்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 91 சமூக நீதி விடுதிகளில் தங்கி 4,058 மாணவா்கள் கல்வி பயின்று வருவதாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சமூக நீதி மாணவ, மாணவிகள் விடுதி கா... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா: 25-ஆவது ஆண்டாக பக்தா்கள் பாதயாத்திரை

கொடைக்கானல் புனித சலேத் மாதா திருவிழாவுக்கு திண்டுக்கல்லிலிருந்து புதன்கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள புனித சலேத் மாதா ஆல... மேலும் பார்க்க

‘ஆட்சிச் சொல்லகராதி, கலைச் சொற்களை அரசுப் பணியாளா்கள் பயன்படுத்த வேண்டும்’

அரசுப் பணியாளா்கள் ஆட்சி சொல்லகராதி, கலைச் சொற்களைப் பயன்படுத்தி கோப்புகளைத் தயாா் செய்ய வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் த... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த தொழிலாளா்கள் மீட்பு

திண்டுக்கல்லில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த இரு தொழிலாளா்களை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், முனிசிபால் காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்து பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞா் கைது

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ எடுத்து மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீஸாா் முடிவு செய்துள்ளனா். கேரள மாநிலம், இடுக்கியைச் சோ்ந்... மேலும் பார்க்க