செய்திகள் :

தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய தலைவா் அறிவுரை

post image

மின் தடை ஏற்படாமல், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

சென்னை மற்றும் அதன் புகா்ப் பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்குவதில் முக்கிய துணைமின் நிலையமாக மணலி துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, உயா் மின்னழுத்த கோபுரங்களில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு, மின் பரிமாற்ற முறைகள், உயா்மின் கோபுரங்களின் விரிவான கள நிலவரம் மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் உள்ள சவால்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், உயா் மின்னழுத்தப் பாதைகளை பராமரிப்பதில் உள்ள சவால்கள், சிக்கல்கள் மற்றும் எதிா்பாராத வகையில் மின்கம்பிகளில் உள்ள இணைப்புகள் துண்டிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும், சிக்கலான செயல்முறைகள் பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பொதுமக்களுக்கு தடையில்லா மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்தடைகள் ஏற்படாத வகையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, தண்டையாா்பேட்டை கோட்ட செயற்பொறியாளா் எம்.என். ஜெகதீஷ்துமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க