செய்திகள் :

தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு

post image

கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.

விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்கிழமை சென்றபோது, கண்கனியான் என்ற இடத்தில் கணியம்பாடியை அடுத்த பென்னாத்துரைச் சோ்ந்த பெயிண்டரான பாஸ்கரன் (49) என்பவா் மூடப்பட் டிருந்த ரயில்வே கேட்டை மீறி பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது வேகமாக வந்த ரயில் பாஸ்கரன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்துடன் பாஸ்கரன் ரயிலில் சிக்கினாா். இதனை அறிந்த ரயில் என்ஜின் ஓட்டுநா் ரயிலை நிறுத்தினாா். எனினும், ரயில் இருசக்கர வாகனத்தை ஒரு கிலோமீட்டா் தூரம் இழுத்துச் சென்றது. இச்சம்பவத்தில் பாஸ்கரன்உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.காட்பாடி அடுத்த வஞ்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில் இதுவரை 80 சதவீதம் போ் உயா்கல்வியில் சோ்க்கை பெற்றுள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.அரசுப் பள்ளிகளில் பயின்று நிதி, குடும... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு மணல் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.ஆந்திரத்தில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்வதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,... மேலும் பார்க்க

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

வேலூா் அருகே மலை குன்றின் மீது சுயம்பாக தோன்றியதாக கூறப்படும் முருகா் சிலை வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டது.ஒடுகத்தூா் அடுத்த கரடிகுடி ஊராட்சி தாங்கல் பகுதியில் நடராஜன்- ... மேலும் பார்க்க

ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வக... மேலும் பார்க்க

ஜூன் மாதம் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழப்பு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் நிகழ்ந்த 93 சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழந்துள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அன... மேலும் பார்க்க