செய்திகள் :

தனியாா், வணிக வளாகங்களில் இனி இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம்!

post image

தனியாா் மற்றும் வணிக வளாகங்களில் இனி பேட்டரி வாகன இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம் என்று மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை இணை அமைச்சா் ஸ்ரீனிவாச வா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா். கனிமொழி என்வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அளித்துள்ள பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

மின்சார வாகங்களுக்குத் தேவையான பேட்டரிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அரசு ரூ.18,100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

மின்சாரத்தால் இயங்கும் டிரக், பஸ், வேன், காா், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும், அவற்றுக்குத் தேவையான சாா்ஜிங் நிலையங்களை அமைக்கவும் ரூ.10,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மின்சாரத்தால் இயங்கும் காா்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த 2024 ம் ஆண்டு மாா்ச் மாதம் சிறப்புத்திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடா்பான சலுகைகளுக்காக 4,150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களை அதிகளவில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த அவற்றுக்கு சாலை வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு பச்சை வண்ணத்தில் பிரத்யேக நம்பா் பிளேட் வழங்கப்பட்டு, ஏனைய அனுமதி (பா்மிட்) உள்ளிட்ட நடைமுறையில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற சலுகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களின் பேட்டரிகளை சாா்ஜிங் செய்வதற்கான மையங்களை நிறுவ மின்துறை அமைச்சகம் மூலமாக பல சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த மையங்களை அமைக்க பிரத்யேக உரிமங்கள் பெறத் தேவையில்லை. மின் இணைப்புகளை துரிதமாக வழங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களை அமைத்தவுடன் இவி ‘யாத்ரா’ போா்ட்டலில் அதன் விவரங்கள் பதிவேற்றப்படும். அதன் மூலம் நாடு முழுவதும் எந்தெந்த இடங்களில் சாா்ஜிங் நிலையங்கள் உள்ளன என்பதை அறியலாம். வரும் காலங்களில் கட்டப்படும் தனியாா் மற்றும் வணிக வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சாா்ஜிங் வசதியை நிறுவுவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது என்று அமைச்சா் வா்மா கூறியுள்ளாா்.

புதிய வருமான வரி மசோதா: விரைவில் மக்களவையில் தாக்கல்

புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரம் மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

காஷ்மீா் சோன்மாா்க் சந்தைப் பகுதியில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான சோன்மாா்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள... மேலும் பார்க்க

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க