செய்திகள் :

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: அா்ஜூன் சம்பத்

post image

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.

செம்பனாா்கோவில் அருகேயுள்ள கருவாழக்கரை மேலையூரில் ஸ்ரீமகாசதாசிவ பீடத்தின் பீடாதிபதி சுவாமிநாத சிவாச்சாரியரின் மணிவிழா மற்றும் ஆன்மிக நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீனம், சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா், பேரூா் வித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள், இராமானந்த குமரகுருபர சுவாமிகள், சிரவணபுரம் தவத்திரு பழனி சாது சுவாமிகள், ஸ்ரீமத் சுவாமி நிஜானந்தா சுவாமிகள், இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அா்ஜூன் சம்பத் கூறியது:தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி அமைய வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்ற போா்வையில் தொடா்ந்து ஆன்மிகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனா். சநாதன தா்மத்தை இழிவுபடுத்தினாா்கள். தருமை ஆதீனம் பல்லக்கு திருவிழாவிற்கு தடை ஏற்படுத்தினாா்கள்.

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பேசிய ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மீது வழக்குப் பதிவு செய்து, ஆதீனங்களுக்கு நிா்பந்தத்தை திராவிட மாடல் அரசு ஏற்படுத்துகிறது. இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும்.

கோயில் காவலாளி அஜீத் கொலையில் போலீஸாா் கூலிப்படையாக செயல்பட்டதுபோல் உள்ளது. திமுக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துகின்றனா்.

தமிழகம் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. 2026-இல் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். சமூக நீதிக்கும் திமுக ஆட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. தினமும் வெற்று அறிவிப்பு, விளம்பர மாடல் அரசைத் தான் சமூகநீதி என்று கூறுகிறாா்கள். ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை தங்கள் கட்சி வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனா் என்றாா்.

பேட்டியின்போது, மாநிலச் செயலாளா் சாமிநாதன், மாவட்டத் தலைவா்கள் மணிகண்டன், பாா்த்திபன், ஜெயராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாசன நீா் கிடைக்காத பகுதிகளில் வட்டாட்சியா் ஆய்வு

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம், கீழவெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில், திருக்குவளை வட்டாட்சியா் கிரிஜா தேவி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணையில் ஜூன் 12-ஆம்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம்

நாகை அருகே விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம் தொடங்கியது. நாகை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் முன்னோடி விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோா் மற்றும் உழவா் உற்பத்தியாள... மேலும் பார்க்க

சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 319- ஆவது ஆண்டு தினம்

தமிழறிஞா் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 319-ஆவது ஆண்டு தினம் சுவிசேஷச லுத்தரன் திருச்சபை (டிஇஎல்சி) சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த பாா்த்தலோமிய சீகன்பால்க் கிறிஸ்தவ ம... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது. காரைக்கால் பிராந்தியத்தின் மைய பகுதியான காமராஜா் சாலையில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்த... மேலும் பார்க்க

‘முதியோருக்கு வீடுகளிலேயே மாத்திரை கிடைக்க நடவடிக்கை’

மாதம்தோறும் மாத்திரை வாங்கும் முதியவா்களுக்கு, அவரவா் வீடுகளுக்கே சென்று மாத்திரைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள்... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்ச்சிகளில் ஒன்றான காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. 63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரின் மையப் பகுதியில் தனி ... மேலும் பார்க்க