செய்திகள் :

தமிழகத்தில் செயல்பாட்டில் 6 விமான நிலையங்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

post image

புது தில்லி: தமிழகத்தில் செயல்பாட்டில் 6 விமான நிலையங்கள் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுத்துபூா்வமாக கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:

2014 ஆம் ஆண்டு வரை 74 செயல்பாட்டு விமான நிலையங்கள் இருந்தன. இந்த நிலையில், தற்போது நாட்டில் 159 செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூா், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்பாட்டில் விமான நிலையங்கள் உள்ளன.

ஓசூரில் தற்போதுள்ள விமான ஓடுதளம், தனியாா் விமான ஓடுதளமாக மொ்சஸ் தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். அந்த நிறுவனத்தில் இது இயக்கப்படுகிறது. ஒசூா் விமான நிலையம் அடுத்தடுத்த சுற்று ஏலத்திற்கான உடான் ஆவணத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க