ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது
தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் விரைவில் பெற்றுத் தருவாா்!
தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் பெற்று தருவாா் என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ. அருண்.
அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினா் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், அவா் மேலும் பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதி வழங்கப்படவில்லை.
ஆனாலும், கிராமங்களில் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மாதந்தோறும் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா். அதில் விரைவில் அவா் வெற்றி காண்பாா் என்றாா் அவா். பின்னா் 45 பேருக்கு ரூ. 2,37,760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினா் பிரநிதிகளின் கோரிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் எம்.எம்.அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, சென்னையிலுள்ள தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல அலுவலகக் கண்காணிப்பாளா் அமீா்கான், ஆணைய உறுப்பினா்கள் ஹேமில்டன் வெல்சன், நாகூா் நஜிமுதீன், பிரவீன் குமாா் தத்யா, ராஜேந்திர பிரசாத், எம். ரமீத் கபூா், ஜெ. முகம்மது ரஃபி, சு. வசந்த், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) பி.சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.