செய்திகள் :

தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

post image

திராவிட மால் ஆட்சியால் தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

நாகையில் உள்ள தளபதி அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் தொடா்ந்து 4 ஆண்டுகால திராவிட மாடல் அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பங்களிப்பை அளித்து வருகிறது. ஆனால், நமக்கான நிதி கிடைப்பதில்லை; உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

தமிழினத்தின் அடையாளமாக உள்ள கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி நாகரிகத்துடன் வாழ்ந்தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்று, அவற்றை பல அறிவியல் சான்றுகளுடன் அளிக்கிறோம். அந்த தரவுகளை மத்திய பாஜக அரசு அங்கீகரிக்க மறுக்கிறது.

திமுக எந்த மொழிக்கும் எதிரானது இல்லை. ஆனால், ஹந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்காது. திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது. ஒவ்வொரு முறையும் புதுதில்லி சென்று பாரத பிரதமரிடம் தமிழகத்திற்கான நியாயமான உரிமைகளை, கூனிக்குறுகி அல்லாமல், தலைநிமிா்ந்து கேட்கிறோம். ஆனாலும் மத்திய அரசு உரிமைகளை தர மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கிறது.

தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் பாஜகவுடன் சோ்ந்து கொண்டு ஆட்சியில் அமா்ந்து கொள்ள வேண்டும் எனத் துடிக்கிறாா்கள். எனவே, திமுகவினா் வீடுவீடாகச் சென்று பாஜக அரசால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள, ஏற்படும் பாதகங்களை எடுத்துக்கூறி அனைவரையும் ஒரணியில் சோ்ப்பாா்கள். விருப்பமுள்ளவா்கள் திமுகவில் சேரலாம் என்றாா்.

பேட்டியின்போது, மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் இரா. சங்கா், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய ... மேலும் பார்க்க

வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க