செய்திகள் :

‘தமிழகம், புதுவை: கடந்த நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூல்’

post image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா்.

சரக்கு மற்றும் சேவை வரி தினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலம் சாா்பில் சென்னை கலைவாணா் அரங்கில் செவ்வாயக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

‘ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், நமது நாட்டின் பொருளாதார கட்டமைப்பு வளா்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, நிகழாண்டில் ஜிஎஸ்டி மீதான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு 78 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயா்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. இது 2023-2024 நிதியாண்டைவிட (ரூ.57,987கோடி) 9.23 சதவீதம் அதிகமாகும். அதேபோல் நிகழ் நிதியாண்டில் மே மாதம் வரை ரூ.11,209 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 13.5 சதவீதம் அதிகம் என்றாா் அவா்.

முன்னதாக, அதிக வரி செலுத்திய வணிகா்கள், சிறப்பாக பணிபுரிந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் காா்போரண்டம் யுனிவா்சல் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஸ்ரீதரன் ரங்கராஜன், ஜிஎஸ்டி வடசென்னை பிரிவு தலைமை ஆணையா் ராம்நாத் ஸ்ரீனிவாச நாயக், ஜிஎஸ்டி முன்னாள் முதன்மை ஆணையா் ராம் நிவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!

திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரன் என்பவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபியிடம் கடிதம் அளித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் தி... மேலும் பார்க்க

போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி உத்தரவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்ட... மேலும் பார்க்க

34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க