செய்திகள் :

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு!

post image

36 நாள்கள் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன்(ஏப். 29) நிறைவு பெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 17 ஆம் தேதி நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகள் மீது பொது விவாதத்துடன் தொடங்கப்பட்டது.

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலுரை, நீர்வளம், இயற்கை வளங்கள் துறைகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது.

இன்று பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது.

அதற்கு அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

விருது பெற்றதில் மகிழ்ச்சி; அனைவருக்கும் நன்றி: அஜித் குமார்

பத்ம பூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். தில்லியில் பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் குமார் இன்று குடும்பத்துடன... மேலும் பார்க்க

தாயைக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை!

சென்னை குன்றத்தூர் அருகே தாயைக் கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.கடந்த 2017-ஆம் ஆண்டு போரூரை அடுத்துள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பத... மேலும் பார்க்க

மதுரையில் கோடைக்கால பயிற்சி வகுப்புகளுக்குத் தடை

மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி பள்ளிகளில் கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.மதுரையில் உள்ள பள்ளிகளில், பள்ளிக் கல்வித்துறை அனுமதின்றி எவ்வித ... மேலும் பார்க்க

மதுரை மழலையர் பள்ளியில் குழந்தை பலி; தாளாளர் உள்பட ஐந்து பேர் கைது

மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது... மேலும் பார்க்க

2026 தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது: ஆர். எஸ். பாரதி

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஆர். எஸ். பாரதி வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் கோடை விடுமுறை!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.கோடைக் கால... மேலும் பார்க்க