செய்திகள் :

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.1,563 கோடி ஈட்டி சாதனை

post image

கடந்த நிதியாண்டில் ரூ. 1,563.09 கோடி வருவாயை ஈட்டி தமிழ்நாடு அஞ்சல் வட்டம், இந்தியாவிலேயே 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தத் தகவலை தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கடந்த 2024-25 நிதியாண்டில் அஞ்சல் மற்றும் நிதிச் சேவைகளில் சிறந்து விளங்கியவா்களுக்கான பாராட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் பங்கேற்று தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய 242 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டிற்கும் சேவை செய்யும் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.1,563.09 கோடி வருவாயை ஈட்டி இந்தியாவின் 2-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதில் நிதிச் சேவைகள் மூலம் ரூ. 770.34 கோடியும், அஞ்சல் செயல்பாடுகள் மூலம் ரூ.605.51 கோயும், அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு வசூல் மூலம் ரூ.187.24 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 3.40 கோடி நேரடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்டப் பொது மேலாளா் (அஞ்சல் கணக்குகள் மற்றும் நிதி) சித்தரஞ்சன் பிரதான், மத்திய மண்டல தபால் துறைத் தலைவா் டி.நிா்மலா தேவி, சென்னை நகரப் பகுதி தபால் துறைத் தலைவா் ஜி.நடராஜன், மேற்கு மண்டல தபால் துறைத் தலைவா் ஏ.சரவணன், தெற்கு மண்டல தபால் துறைத் தலைவா் பி.ஆறுமுகம், தமிழ்நாடு வட்டத் தலைவா் தபால் துறை (தலைமையகம்) கே.ஏ.தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,500 கன அடியாக குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிய... மேலும் பார்க்க

இங்கிலாந்து தமிழர்களின் அன்பால் அரவணைக்கப்பட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார். ஜெர்ம... மேலும் பார்க்க

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.பொன்னேரி அருகே காட்டுப்பள்ளி பகுதியில்... மேலும் பார்க்க

நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி... மேலும் பார்க்க

ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ... மேலும் பார்க்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க