செய்திகள் :

`தமிழ்நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்!' - சென்னையில் பெரு தூதர்

post image

தென் அமெரிக்க நாடான பெரு தன் 204-வது விடுதலை நாளை கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் பெரு நாட்டின் சுதந்திர தினம் சென்னையிலும் கொண்டாடப்பட்டது.

சுரங்கம், ஆட்டோமொபைல், தகவல் தொடர்பு துறை, விவசாயம் ஆகிய துறைகளில் இந்தியா - பெரு ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

1963 ம் ஆண்டு முதலே இந்தியாவுக்கும் பெருநாட்டுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தென் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளை மட்டும் கணக்கில் கொண்டால் இருநாடுகளுக்கான வர்த்தகத்தில் பெரு, மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அதாவது 2019-20 ஆண்டில் 234 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த இரு நாட்டு வர்த்தகம் 2023-24 ஆண்டு 403 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். "தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருநாடுகளுக்கு இடையே தற்போது தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் மரபுசார சக்தியினால் இயங்கக்கூடிய வாகனங்கள் துறை, மருத்துவ துறை, மின்னியல் தொழில்நுட்பம் என பல துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையே வர்த்தம் மேலும் மேம்படும்" என்றார் பெருநாட்டின் கெளரவ தூதராகச் செயல்படும் TVS Supply Chain Solutions தினேஷ்.

இவ்விழாவில் கலந்து கொண்ட பெருநாட்டின் தூதரான Javier Manuel Paulinich Velarde பேசுகையில், ``பெரு நாட்டின் சுதந்திர தினம் முதன்முதலாக சென்னையில் கொண்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுடன் குறிப்பாக தொழில் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டுடன் வர்த்தகம் மற்றும் பண்பாட்டு உறவுகளை மேம்படுத்திக்கொள்ள பெரு ஆர்வமாக இருக்கிறது" என்றார்.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் உட்பட பல நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

BJP: 'வெளியான பாஜக நிர்வாகிகள் பட்டியல்' - கைவிடப்பட்டாரா விஜயதரணி?

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநிலத் துணைத் தலைவர்களாகவும், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 15 ப... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: "சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதற்கு அதிமுக-வின் அழுத்தம்தான் காரணம்"- இபிஎஸ்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டவிரோத காவலில் கொலை செய்யப்பட்ட மடப்புரம் அஜித்குமார் வீட்டுக்கு இன்று (ஜூலை 30) சென... மேலும் பார்க்க

நெல்லை: திருடிய நகையை மீண்டும் வீட்டில் வைத்த திருடன்.. என்ன காரணம்?

வீட்டிலிருந்து திருடிச் சென்ற நகையை மீண்டும் அதே வீட்டுக்குள் திருடன் வைத்து சென்ற ஆச்சர்ய சம்பவம்ஆண்டுதோறும் எதோவொரு மாவட்டத்தில் நடந்துகொண்டேதான் இதுக்கிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ரம்மதப... மேலும் பார்க்க

`இதில் அரசியல் இல்லை..!’ - பிரதமர் மோடி நிகழ்சியில் திருமாவளவன் பங்கேற்றது குறித்து வன்னிஅரசு

இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த மோடி, சனிக்கிழமை துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் ப... மேலும் பார்க்க

Top News : பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் டு முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் | ஜூலை 27 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 27) முக்கியச் செய்திகள்!பீகாரில் ஊர்க்காவல் படை தேர்வில் கலந்துக்கொண்டப் பெண் ஒருவர் மயங்கிய நிலையில், அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது கூட்டு பாலியல் வன்கொடு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Coverage Album

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்.! மேலும் பார்க்க