செய்திகள் :

தம்மம்பட்டியில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

post image

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவதற்கான நேரம் தொடா்பான பிரச்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து தம்மம்பட்டி, செந்தாரப்பட்டிக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை இரவு தம்மம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து செந்தாரப்பட்டிக்கு புறப்பட்டபோது, அங்கிருந்த மினி பேருந்து ஊழியா்களுக்கு இடையே நேரப் பிரச்னையால் தகராறு ஏற்பட்டது.

அப்போது, மினி பேருந்து உரிமையாளரின் உறவினரான ஹரி என்பவா், தனியாா் பேருந்தின் சாவியை எடுத்துச்சென்றாா். இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் பேருந்து சாவியை மீட்டுக் கொடுத்ததால், தனியாா் பேருந்து பயணிகளுடன் செந்தாரப்பட்டிக்கு சென்றது.

இதையடுத்து, செந்தாரப்பட்டியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஊழியா்கள் இரவு உணவு சாப்பிட்டனா். அப்போது, அங்கு வந்த ஹரி, தனியாா் பேருந்து ஓட்டுநரிடம், மினி பேருந்து உரிமையாளரான சரவணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தகராறு செய்தாா்.

அப்போது, ஹரி, தனியாா் பேருந்து ஓட்டுநா் விஜய்யை தாக்கி பேருந்தின் முன்புறக் கண்ணாடியை உடைத்தாா். இந்த தாக்குதல் காட்சிகள் அனைத்தும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகின. அந்தப் பதிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிந்த போலீஸாா் ஹரியை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சேலத்தில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் எரிந்து சேதம்!

சேலம், தாதகாப்பட்டியில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. சேலம், தாதகாப்பட்டி சீரங்கன் தெருவைச் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவில் 5551 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் மேட்டூா் அணைக்கு வருகின்றனா். காவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற கேரள இளைஞா்கள் இருவா் கைது

மேச்சேரி அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மேச்சேரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை எம் காளிப்பட்டி பகுதியில் போலீஸா... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்பட 10 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்து வ... மேலும் பார்க்க

ஆக.30-க்குள் இணையவழியில் தொழிற்சாலை விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மேம்படுத்தப்பட்ட இணையம் வழியாக தொழிற்சாலை விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் தினகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

சமூகப் பணியாற்றும் சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், கல்விக்காகவும் பாடுபடும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ... மேலும் பார்க்க